சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
தான் விருதுகளை குறிவைத்து எப்போதும் நடிப்பதில்லை என்றும், விருது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுபவளும் தான் அல்ல என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். தியா மிர்சா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் பாபி ஜஸோஸ். இந்த படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தபோதிலும், பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில், எந்தவொரு விருது பரிந்துரையிலும், பாபி ஜஸோஸ் படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வித்யா பாலன் கூறியுள்ளதாவது, விருது வழங்குதல் என்பது, அந்தந்த நடுவர்களின் தீர்ப்பை பொறுத்தது. அவர்களின் முடிவிற்கு எப்போதும் தலைவணங்குகிறேன். பாபி ஜஸோஸ் படத்திற்கு விருது கிடைக்காதது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்குமே தவிர, தன்னை அது பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.