தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக சினிமாவில் அறிமுகமானவர் கருணாஸ். ஆனால், அதறகு முன்பு மேஸ்ட்ரோ என்ற பெயரில் அவர் சென்னையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவரது கச்சேரியில் பாட வந்தவர் கிரேஸ். அவரைத்தான் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் கருணாஸ்.
ஆனால் அப்படி அவர் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தபோது, ரொம்ப கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதாவது, பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், அந்த சமயத்தில் சென்னை தி.நகரில் நடிகர் விஜயகாந்த் தங்கியிருந்த ரோகிணி லாட்ஜ்க்குதான் செல்வாராம். அங்கு யார் எப்போது சென்றாலும் பிரியாணி சாப்பிடலாம் என்பதால், தான் இருக்கும் ஏரியாவில் இருந்து சைக்கிளில் சென்று வயிறார சாப்பிட்டு விட்டு திரும்புவாராம்.
இதை சகாப்தம் ஆடியோ விழாவில் தெரிவித்த கருணாஸ். எப்போது நான் பிரியாணி சாப்பிட்டாலும் கேப்டன் கொடுத்த அந்த பிரியாணியைதான் நினைத்துக்கொள்வேன். அந்த வகையில், சில நன்றி கெட்ட காமெடி நடிகர்களைப்போன்று இல்லாமல் என்றென்றைக்கும் நான் கேப்டனுக்கு நன்றியுள்ள காமெடியனாக இருப்பேன் என்று வடிவேலுவை மனதில் கொண்டு பேசினார் கருணாஸ்.