ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக சினிமா உலகில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடத் தொடங்கியிருககிறது. அந்த வகையில், கோலிவுட்டைப்பொறுத்தவரை, விஜய், சூர்யா, கார்த்திக், சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, ஜீவா, சாந்தனு, விஷால், சண்முகப்பாண்டியன் என பல வாரிசு நடிகர்கள் இறக்குமதியாகியுள்ளனர். அதேபோல், நடிகைகளில் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன், ஐஸ்வர்யா அர்ஜூன், வரலட்சுமி என பலரும் நடிக்க வந்து விட்டனர். அதேபோல் ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே இயக்குனர்களாக உள்ளனர்.
இவர்கள் வரிசையில் கூடிய சீக்கிரமே கவுதமியின் மகள் சுப்புலட்சுமியும் நடிகையாக இறக்குமதியாக தயாராகி வருகிறார். தற்போது 16 வயது பெண்ணாக இருக்கும் சுப்புலட்சுமியையும் எதிர்காலத்தில் தன்னைப்போலவே ஒரு நடிகையாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சினிமாவுக்குத் தேவையான அனைத்து வகை நடனங்களையும் பயிற்றுவித்து வந்த கவுதமி, நல்ல கதை, இயக்குனரின் அழைப்புக்காக வெயிட்டிங்கில் உள்ளாராம்.