தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிருத்விராஜும், இந்திரஜித்தும் சகோதரர்கள் என்பதும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பத்து படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. பத்தாவது படம் தான் ஆர்யா, பிருத்விராஜ், இந்திரஜித் கூட்டணியில் உருவாகி வரும் 'டபுள் பேரல்'.
ஆனால் பதினொன்றாவது முறையாக இருவரும் 'அமர் அக்பர் ஆண்டனி' என்கிற படத்தில், அமர், அக்பராக இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.. மூன்றாவது ஆண்டனி கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார். 'கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து ஒன்பது வருடம் கழித்து இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது. பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வரும் நடிகர் நாதிர்ஷா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.. கதாநாயாகியாக வேதிகா நடிக்க இருக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.