600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் நவீன் என்ற நவீன் கிருஷ்ணன். நெல்லை சந்திப்பு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் கதை இவருடையது தான். இதுகுறித்து நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது, இரண்டு வருடத்திற்கு முன்னர் சகாப்தம் படத்தின் கதையை உருவாக்கினேன். வௌிநாடுகளுக்கு வேலைக்கு போய் திரும்பியவர்கள் அவர்களது மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் அங்கு அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வது கிடையாது. அப்படி அவர்கள் அங்கு சந்திக்கும் பிரச்னைகள், வலி போன்றவையே சகாப்தம் படத்தின் கதை. நம்மூரிலேயே நிறைய வேலைகள் இருக்கிறது சொந்த மண்ணை நேசி என்று சொல்கிற படம் தான் சகாப்தம்.
இந்த கதையை நான் தயார் செய்தபோது, இதில் விஜயகாந்த் மகன் நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. விஜயகாந்த் தனது மகனை சினிமாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டு அவரிடம் இந்த கதையை கூறினேன். தன் மகனுக்கு சுமார் 150 கதைகளை கேட்டுவிட்டு வேண்டாம் என்று ஒதுக்கிய விஜயகாந்த், எனது கதையை ஓ.கே. செய்தார். என் கதையில் விஜயகாந்த் மகன் நடித்தது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். சாதாரண கதையாகத்தான் இப்படத்தை எடுக்க இருந்தேன், ஆனால் இந்தப்படம் இப்போது இவ்வளவு பிரமாண்டமாக உருவாகும் என நினைக்கவில்லை. விஜயகாந்த் மகனுக்காக சில கமர்ஷியல் விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு நவீன் கூறினார்.