இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்” இந்த படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். மற்றும் கே.பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, நான்கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் சுரேஷ், சார்மிளா, ராதா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - செல்வா.ஆர்.எஸ் / இசை - ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள் - நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி, கவிபாஸ்கர்.
கலை - பத்மநாபகதிர் / எடிட்டிங் - லான்சிமோகன் / நடனம் - சஞ்சீவ்கண்ணா, ஸ்டன்ட் - மிரட்டல்செல்வா / தயாரிப்பு நிர்வாகம் - ரஞ்சித், பழனியப்பன் நிர்வாக தயாரிப்பு - குமரன்
தயாரிப்பு - C.மாதையன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி.
படம் பற்றி இயக்குனர் ராதாபாரதியிடம் கேட்டோம்..... இது நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி உருவாக்கி உள்ளோம். சமீபத்தில் இந்த படத்திற்காக நட்பை மையப்படுத்தி
“அண்ணன் தம்பிய கூப்பிட்டுப்பாரு”
அக்காவையும் கூப்பிட்டுப்பாரு
மாமன் மச்சான கூப்பிட்டுப்பாரு
மாப்பிள்ளையையும் கூப்பிட்டுப்பாரு
சொந்த பந்தத்தையும் கூப்பிட்டுப்பாரு
உதவின்னு கேட்டுப் பாரு
யாரு வருவாங்கன்னு கேட்டுப் பாரு?