வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை....இனிவரும் காலங்களிலும் நடிக்கப்போவதுமில்லை என்று பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ஷமிதாப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில், அமிதாப் பச்சன் தற்போது பிசியாக உள்ளார். ஷமிதாப் படம் குறித்தும், அப்படத்தில் தனது கேரக்டர் குறித்தும், அமிதாப், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஷமிதாப் டைட்டிலில் ஏதாவது ரகசியம் உள்ளதா?
ஆமாம். (சிரிக்கிறார்). ஷமிதாப் படத்தின் டைட்டில், அனைவரது விவாதப் பொருளாக மாறும் என்பதை, இந்த பெயர் தேர்ந்தெடுக்கும்போதே நினைத்தோம். என் பெயர் மற்றும் தனுஷின் பெயரின் கலவையே, ஷமிதாப் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால், அது தவறு. படத்தின் கதைக்கு ஏற்ப தான், ஷமிதாப் என்று டைட்டில் வைத்துள்ளோம். படம் பார்த்தபிறகு, உங்களுக்கு இந்த உண்மை புரிய வரும்.
படத்தில் உங்களது அனுபவம் கைகொடுத்தா?
ஷமிதாப், என்னை சார்ந்த படம் அல்ல. ஒரு குழுவினரின் கடின உழைப்பில் உருவாகியுள்ள படம். ஒரு படத்திற்கு ஒருமுறை தான் ரெக்கார்டிங் செய்வார்கள், இதுதான் வழக்கம். ஆனால்,. இந்த ஷமிதாப் படத்திற்காக, 3முறை ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சீனும், அதற்குரிய வசனங்களும், மூன்று முறை படமாக்கப்பட்டுள்ளது. ஏனென்று, படம் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.
ஷமிதாப் என்ன மாதிரியான படம்?
தங்களுக்கே உரிய வியத்தகு திறமைகளை கொண்ட இரண்டு நண்பர்கள் / இரண்டு மனிதர்கள், தங்களுக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சண்டையிட்டு பிரிகின்றனர். பின் அவர்களுக்குள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்த கதையே, ஷமிதாப் படம். இப்படத்தில், அக்ஷரா ஹாசன், பத்திரிகையாளர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம், அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமையும்.
ஷமிதாப் படத்தில் பாட்டு பாடியுள்ளீர்களாமே?
ஆமாம், அது உண்மைதான். ஷமிதாப் படத்திற்காக, நான் பாட்டு பாடியுள்ளேன். எனது குரல், ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. கதையின் தேவைக்காக, தான் இந்த படத்தில் பாட்டு பாடியுள்ளேன். இந்த படத்தில், ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நான் நடித்துள்ளேன். இது எனது முந்தைய தோற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்த படத்திற்காக, ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த மேக்கப் மேன், எனக்கு மேக் அப் போட்டுள்ளார்.
தனுஷ் மற்றும் அக்ஷராவுடன் இணைந்து நடித்தது குறித்து..
ஷமிதாப் படத்தில், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் அக்ஷரா ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளேன். தனுஷ், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். அக்ஷரா ஹாசன், இப்படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இரண்டு பேரும், மிகவும் திறமையான நடிகர்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது.
உங்களது முக்கியத்துவம் கதைக்கா? அல்லது பேனருக்கா?
நான் எனது திரையுலக பயணம் துவக்கியதில் இருந்தே, படத்தின் கதைக்கு மட்டுமே, முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தை முதலில் தேர்வு செய்வதற்கு முன், படத்தின் கதை மற்றும் எனது கதாபாத்திரம் குறித்து முழுவதும் கேட்டு தெரிந்துகொள்வேன். சிறந்த கதையா, அதில் தனக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டே நான் படத்தை தேர்வு செய்வேனே தவிர, பட தயாரிப்பு நிறுவனமோ, அல்லது பெரிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனரா என்பதை நான் ஒருபோதும் மனதில் கொள்வதில்லை.
திரைத்துறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
நான் இளைஞனாக இருக்கும் போது, படங்கள் மெதுவாகவும், அதை பார்க்கும் மக்களும், பெரிதும் ஆரவாரம் செய்யாமல், அமைதியாக படம்பார்த்தனர். விரைவான மற்றும் அதிரடியான படங்களை அப்போதைய மக்கள் விரும்பியதில்லை. ஆனால், இப்போதோ, மெதுவாக இயங்கும் எந்தவொன்றையும், தற்போதைய மக்கள் விரும்புவதில்லை. அது திரைப்படமாக இருந்தாலும் சரி. எதுவும், விரைவாக நடைபெற வேண்டும் என்று அவர்கள் நினைக்கி்ன்றனர். மக்களின் தொடர்பு வசதிகளும், குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் பெற்றுள்ளன. இப்போதெல்லாம், ஒரே ஒரு சொல்லில், நான்கு சென்டன்ஸ்களை உருவாக்கி விடுகின்றனர்.
முத்தமிடுவது போன்ற காட்சி குறித்து உங்கள் கருத்து?
தற்போதைய சமூகத்திலும் மற்றும் திரைப்படங்களிலும், இளைஞர்களுக்கு போதிய அளவு சுதந்திரம் வழங்கப்பட உள்ளது. பழைய படங்களில், முத்தமிடுவது போன்ற காட்சிகள் இருக்காது. ஆனால், இன்றோ, படம் முழுமைக்கும், முத்தமிடும் காட்சிகள் இருக்கின்றன. படம் பார்ப்பவர்களும் அதையே விரும்புகின்றனர். இப்போது, படங்களில் முத்தமிடுவது போன்ற காட்சிகள் வருவது சர்வசாதாரணமாகிவிட்டது. நான் இதுவரை முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை....வருங்காலத்திலும், முத்தமிடுவது போன்ற காட்சிகளில் நடிக்கப்போவதுமில்லை என்று அமிதாப் பச்சன் கூறினார்.