இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து புதுமுக நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்தார் பிரபுசாலமன். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, படம் ஆரம்பித்தது முதல் கடைசிவரை என்னோடு ஹீரோக்கள் ட்ராவல் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் புதுமுகங்களை ஹீரோவாக்குகிறேன். பிரபல ஹீரோக்களால் என்னால் ட்ராவல் பண்ண முடியாது என்று ஒருமுறை விளக்கம் சொன்னார் பிரபுசாலமன்.
இப்படி சொன்ன பிரபு சாலமன் கயல் படத்தை அடுத்து இயக்க உள்ள படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான கதை விவாதம் இப்போது நடைபெற்று வருகிறது. தற்போது பாலாஜி மோகன் இயக்கும் மாரி படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூதாடி என்ற படத்திலும், ஒளிப்பதிவாளரும் வேலையில்லா பட்டதாரி வெற்றிப்படத்தின் இயக்குநருமான வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் நடிப்பதாக சொன்னாலும் இப்படங்களின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. எப்போது துவங்கும் என்பது குறித்தும் எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, மாரி படத்தை முடித்துவிட்டு பிரபு சாலமன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், தனுஷ் வரும்போது ஸ்கிரிப்ட் ரெடியாக இருந்தால்தான் பிரபுசாலமன் படத்தில் நடிப்பார் என்றும், இல்லை என்றால் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்துவிட்டுத்தான் பிரபுசாலமன் படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் என்றும் தனுஷ் வட்டாரத்தில் தகவல் அடிபடுகிறது.