ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆடுகளம்' நாயகி நடித்துள்ள 'பேபி' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பல பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். எப்படியாவது பாலிவுட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென டாப்சி முயற்சிக்கிறார். தெலுங்கில் ஓரளவிற்குப் பெயர் வாங்கினாலும் தமிழில் டாப்சியால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. 'ஆடுகளம்' படத்தைத் தவிர டாப்சிக்கு வேறு எந்தப் படங்களும் வெற்றியைத் தேடித் தரவில்லை.
'பேபி' படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவருடைய மனம் கவர்ந்தவரைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் டாப்சி. “என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். என்னுடைய தோழி வீட்டில் கூட என்னை அவர் தங்க அனுமதித்ததில்லை. ஆரம்ப காலத்தில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த போது, என் மீது அனைவரும் பாசமாக இருந்தார்கள். அந்த நம்பிக்கையில் ஒருவருடன் நான் தங்கியிருந்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அதன் பின் அவரை விட்டு நான் பிரிந்து விட்டேன். ஒரு வாரத்திற்கு அந்த பிரிவு என்னை கஷ்டப்படுத்தியது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன்,” என டாப்சி கூறியிருக்கிறார். ஆனால், அவர் யார் என்பதைப் பற்றி டாப்சி எதுவும் கூறவில்லை. அனேகமாக அது யாராவது நடிகராகத்தான் இருக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா....!