மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் என்பதையும் தாண்டி இப்போது மலையாளத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்தாலும், அவருக்கு தமிழில் கிடைத்த அறிமுகம் சரியாக அமையவில்லை என்கிற வருத்தம் சிலமாதங்கள் முன்பு வரை இருந்தது உண்மைதான்.. ஆனால், லேட்டானாலும் லேட்டஸ்டாக மோதிரக்கையால் குட்டுப்படுவதுபோல மணிரத்னம் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் 'ஓகே கண்மணி' படம் அந்த குறையை போக்கும் விதமாக அமைந்துவிட்டது..
மணிரத்னம் படம் தான் என்றாலும் இந்தப்படம் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய போட்டியை சந்திக்கும் என்றே தெரிகிறது. இந்தப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.. ஆனால் அந்த சமயத்தில் தான் கமலின் 'உத்தம வில்லன்', விக்ரமின் 'பத்து எண்றதுக்குள்ள', கார்த்தியின் 'கொம்பன்', ஆர்யாவின் 'புறம்போக்கு', ஜெயம் ரவியின் 'ரோமியோ-ஜூலியட்' மற்றும் லாரன்சின் 'முனி-3' ஆகிய படங்களும் ரிலீசாக இருக்கின்றனவாம்.. மணிரத்னம் உதவியால் போட்டிக்கடலில் குதித்து, துல்கர் கரை சேர்வாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.