'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
எந்த நேரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் தனது 'லாலிசம்' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தாரோ, அப்போதிருந்து அவர்மீது தேவையில்லாத வீண்பழிகள் குத்திக்கிழிக்கும் அம்புகளாய் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இசை நிகழ்ச்சிக்காக அவர் கேரள அரசிடம் இரண்டு கோடி ரூபாய் கேட்டார் என்று பரவிய செய்திதான் பிரச்னையின் ஆணிவேர்.. மலையாள இயக்குனர் வினயன் கூட, தான் ஏதோ ஒரு மேதாவி போல, உண்மை எதுவென அறிந்துகொள்ளாமல் மோகன்லாலை விமர்சித்திருக்கிறார்.
ஆனால் இந்த இசைக்குழுவின் பிரதான இசையமைப்பாளரான ரதீஷ் வேகா இது பற்றி கூறும்போது, “மோகன்லால் இசைக்குழுவை ஆரம்பித்ததும், தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழாவின்போது இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்ததும், அவரது ஆத்மார்த்தமான இசை ஆர்வத்தினால் தான்.. இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் நேரத்தில், அவர் இந்த இரண்டுகோடி ரூபாயை, ஒரு படத்தில் நடித்து சம்பாதித்து விடுவார். அப்படியிருக்க தேவையில்லாமல் அவர்மீது இரண்டுகோடி ரூபாய் கேட்டார் என அபாண்டமாக வீண்பழி சுமத்துவது அர்த்தமற்றது” என கொதித்திருக்கிறார்.