அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
நாய்களை வைத்துதான் படம் எடுக்கமுடியுமா..? நம்ம ஊர் 'ஆட்டுக்கார அலமேலு' மாதிரி 'ஆட்டை வைத்து படம் எடுக்க முடியாதா?.. முடியும் என ஆட்டை வைத்து மலையாளத்தில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் ஜெயசூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா.? 'ஆடு ஒரு பீகர ஜீவியானு'.. அதாவது 'ஆடு ஒரு பயங்கர மிருகம்' என்று அர்த்தமாம்..
ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு ஆடு, அதுவும் சொன்னபடி கேட்டு நடக்கிற சண்டித்தனம் பண்ணாத பெண் ஆடு ஒன்று இந்தப்படத்தில் நடித்திருக்கிறது.. காமெடி படமாக உருவகியுள்ள இந்தப்படத்தில், ஆட்டுக்கு கிட்டத்தட்ட கதாநாயகிக்கு இணையான வேடமாம். வரும் பிப்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் மெகாஸ்டார் மம்முட்டி கலந்துகொண்டார்.. அப்போது 'எங்கேப்பா டைட்டில் ரோலில் நடித்திருக்கும் அந்த ஜீவன்?” என விழாவில் அந்த ஆட்டை காணோமே என கேட்டு ஜாலியாக கலாட்டா செய்தார்.. அனைவரும் கலந்துகொண்ட அந்த விழாவில் அந்த ஆடு மட்டும் கலந்துகொள்ளவில்லை.. இதே தமிழில் உருவான 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் அந்தப்படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது அந்தப்படத்தில் நடித்த நாய்க்கும் ஒரு நாற்காலி போட்டு அமரவைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..