தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. அப்படித்தான் இப்போது டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு யோசனை சொகிறேன் என, அவர் ஆரம்பித்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியைப்பற்றி தேவையில்லாமல் வாயை கொடுத்துள்ளார்..
சிரஞ்சீவி தற்போது தனது 150வது படத்திற்கான கதையையும் அதை இயக்கப்போகும் இயக்குனரையும் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் “சிரஞ்சீவியின் 150வது படத்தை மற்ற இயக்குனர்களிடம் ஒப்படைப்பதைவிட அவரே இயக்குவது தான் சிறந்ததாக இருக்கும்.. சிரஞ்சீவி சினிமாவின் அனைத்து துறைகள் பற்றியும் கரைத்து குடித்தவர். அதனால் அவரே படத்தை இயக்க தகுதியானவர்தான்” என்று கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. “அப்படி சிரஞ்சீவி அவரது படத்தை இயக்கினால் அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்” என ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் டிவிட்டரில் போட இப்போது சிரஞ்சீவியின் ரசிகர்களின் அக்னிப்பார்வைக்கு இலக்காகியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.. ஒருவேளை, தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்தபின் படத்தில் நடிப்பதை விட்டுவிட்ட விஜயகாந்த், கொஞ்சநாள் கழித்து அவர் நடித்த படமான 'விருதகிரி'யை அவரே இயக்கிய சம்பவத்தை தான் தனது யோசனையாக சொல்லியிருப்பாரோ ராம்கோபால் வர்மா..?