'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை நயன்தாரா டாஸ்மாக்கில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணைய தளத்தில் வெளியானது. அது வைரலாக பரவியது. நயன்தாரா மதுக்கடையில் சென்று பீர்வாங்கும் காட்சியை கண்டித்து சில அமைப்புகள் அறிக்கை வெளியிட்டது. போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் மதுக்கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சி ஒரு சினிமாவுக்காக எடுக்கப்பட்ட காட்சி. பாண்டிச்சேரியில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு கடையில் இந்த காட்சி எடுக்கப்பட்டது. நான் என்னை பற்றி வரும் எந்த கிசுகிசுவிற்கும் விளக்கம் தருவதில்லை. ஆனால் நான் நடித்த ஒரு சினிமா காட்சியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பிரச்னையை தூண்டிவிடுகிற மாதிரி ஊதி பெரிதாக்குவதை கண்டிக்கிறேன். இது சிறுபிள்ளைத்தனமானது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு கடையில் நான் போய் மது வாங்க முடியுமா? இதை ஏன் யாரும் யோசிக்க வில்லை. எனவே சினிமாவுக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நயன்தாரா அறிக்கையில் கூறியுள்ளார்.