மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திரைப்படங்களை மக்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன் தொடங்கினார் இயக்குநர் சேரன். சி2ஹெச் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தனது முதல்வௌியீடாக தான் இயக்கிய ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கையை வௌியிட இருந்தார்.சமீபத்தில், இந்த திட்டம் தொடர்பாக ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்தார். மேலும் இத்திட்டம் மூலமாக உலகம் முழுவதும் 50 லட்சம் டிவிடிக்கள் விற்பனையாகும் என்று கூறி வந்தார். அதேசமயம் தியேட்டர் அதிபர்கள் பலர் இவரது திட்டத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்திட்டம் மூலமாக வௌியாக இருந்த ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சேரன், தயாரிப்பாளர்கள், விநியோகதஸ்ர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தை இன்னும் பெரிதாக செய்யலாம், அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இத்திட்டத்திற்கு உதவுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை ரிலீஸ் தள்ளிபோகிறது. அடுத்தமாதம் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா எடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.