'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னையை சேர்ந்த ஜி.அலெக்ஸ், பென்சீகர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் "தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்களும், ஆபாசமான வசனங்களும், வன்முறை காட்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகிறது. இதனால் தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு தணிக்கை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் கோர்ட் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை எதுவுமில்லை என்றாலும் கேபிள் டி.வி நெட்வொர்க் சட்டம் 1995ன்படி கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறியதாகவோ, அல்லது வேறு விதமான புகார்கள் வந்தால் அதன் மீது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க எலெக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. பொதுவான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் நீதிமன்றம் தலையிடவோ சட்டம் இயற்ற வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது. அரசுதான் முடிவு செய்ய வேண்டும். என்று தீர்ப்பு கூறியது.