பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த லிங்கா படம் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளிவந்தது. விநியோகஸ்தர்கள் பிரச்னை, கதை திருட்டு வழக்குகள் என தொடர் பிரச்னைகளை லிங்கா சந்தித்து வருகிறது.
மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் "லிங்கா படம் நான் எடுத்து வரும் முல்லைவனம் 999 என்ற படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டது" என்று வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு மனுதாரர் சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிவராணம் தேடிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியது.
ரவிரத்னம் விடுவதாக இல்லை. மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். "முல்லை வனம் கதையும், லிங்கா கதையும் ஒன்றுதான் என்று உத்தரவிடவேண்டும். வழக்கு முடியும் வரை லிங்கா கதைக்கு அவர்கள் உரிமை கொண்டாடக்கூடாது" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை கோர்ட்டில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டது. பின்னர் வழக்கை வருகிற மார்ச் மாதம் 16ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.