ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற எனக்கு தகுதி இல்லை என பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கவுரவிக்கும் வண்ணம், மத்திய அரசு, அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு, மத்திய அரசு, பத்மவிபூஷண் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனிடையே, அமிதாப்பிற்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டுவிட்டரில் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக, டுவிட்டரில், அமிதாப் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு மத்திய அரசு பத்மவிபூஷண் விருது அறிவித்திருப்பதையே பெரும் கவுரவமாக கருதுகிறேன். பாரத ரத்னா விருது பெருமளவிற்கு நான் தகுதியுடையவன் அல்ல என்று அதில் அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.