ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
அனுஷ்கா நடித்து இன்னும் சில நாட்களில் தமிழில் 'என்னை அறிந்தால்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வேறு எந்த புதுப் படமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. ஏனென்றால், அனுஷ்காவிற்கு தற்போது எந்தப் புதுப்படங்களும் ஒப்பந்தமாகவில்லை.
இந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்காவிற்குத் திருமணம் நடந்தாலும் நடக்கலாம் என வழக்கம் போல அவரைப் பற்றிய வதந்தி ஏற்கெனவே பரவ ஆரம்பித்துவிட்டது. அவருடைய பெற்றோர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் என வதந்திக்கு அவரது குடும்பத்தாரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
'அருந்ததி' படம்தான் அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே அளவிற்கு 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களும் பெற்றுத் தரும் என்கிறார்கள். அதனால், அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்ததே சாதனைதான். அதனால், காலாகாலத்தில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.