தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
அனுஷ்கா நடித்து இன்னும் சில நாட்களில் தமிழில் 'என்னை அறிந்தால்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வேறு எந்த புதுப் படமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. ஏனென்றால், அனுஷ்காவிற்கு தற்போது எந்தப் புதுப்படங்களும் ஒப்பந்தமாகவில்லை.
இந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்காவிற்குத் திருமணம் நடந்தாலும் நடக்கலாம் என வழக்கம் போல அவரைப் பற்றிய வதந்தி ஏற்கெனவே பரவ ஆரம்பித்துவிட்டது. அவருடைய பெற்றோர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் என வதந்திக்கு அவரது குடும்பத்தாரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
'அருந்ததி' படம்தான் அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே அளவிற்கு 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களும் பெற்றுத் தரும் என்கிறார்கள். அதனால், அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்ததே சாதனைதான். அதனால், காலாகாலத்தில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.