விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு |
முற்றிலும் புதுமுகங்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் டூரிங் டாக்கிஸ். ஒரே படத்தில் இரண்டு கதையுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது.
ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், இளைய தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஆடியோ கேசட்டை வெளியிட, இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் பெற்றுக்கொண்டார். மேலும் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
இயக்குநர் முருகதாஸ் பேசும்போது....
சினிமாவிலே நேரம் தவறாமை யார்கிட்டே கத்துக்கிட்டேன்னு கேட்டா, அது எஸ்.ஏ.சி.சார் கிட்டே தான். ஏன்னா 8 மணிக்கு மீட்டிங்கின்னா சரியா 07.45க்கெல்லாம் வந்துடுவாரு. அது மட்டுமி்ல்லாம, யார் வரணும் வரலேன்னு காத்துகிட்டு இருக்க மாட்டாரு. ஷார்ப்பா 8 மணிக்கு மீட்டிங்க ஆரம்பிச்சிடுவார். இவர் சினிமா எடுத்த ஆரம்ப கால கட்டங்கள்ல இவர் படத்துல வச்ச புரட்சிகரமான வசனம்தான், இன்னைக்கு நான் எழுதுற வசனத்துக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். அப்பவே யாருக்கும், எதற்கும் பயப்படாமல் துணிச்சலாக ஒருத்தர் படம் எடுத்தாருன்னா அது எஸ்.ஏ.சி.தான். அவரின் அந்த புரட்சிகர துணிச்சல், இன்றைய இளைய தலைமுறைகள் யாருக்கும் வராது. சார் இந்த படத்தோட டைரக்ட் பண்ணப் போறத நிறுத்தப்போவதா சொல்லியிருக்காரு. தயவுசெயது நிறுத்தாதீங்க. ஏன்னா, உங்கள மாதிரி துணிச்சலான ஆளுங்க சினிமாவுக்கு வேணும். உங்கள மாதிரி நிறைய படங்கள் நான் டைரக்ட் பண்ணுவேனா தெரியாது. ஆனா, நீங்க தொடர்ந்து சினிமாவுல படங்கள இயக்கி எங்கள மாதிரி டைரக்டர்களுக்கு வழிகாட்டணும். பல புதிய கதாநாயகர்களை உருவாக்கின நீங்கள் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் பாடல்களை வெளியிடுவதில் ரொம்ப பெருமைப்படுறேன்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு பேசும்போது...
நான் தமிழ் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்தே, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். 70-80 ஆண்டுகளிலேயே சினிமாவில், பல புரட்சிகரமான வசனங்களை துணிச்சலாக வைத்தவர் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் டூரிங் டாக்கிஸ் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படம், எஸ்.ஏ.சி.யின் வாழ்க்கையில் முக்கிய பாடமாக அமையும். தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெறும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இப்படத்தை, இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து இயக்கவிருக்கிறார் எஸ்.ஏ.சி. அந்தப்படத்தை நானே தயாரிக்க இருக்கிறேன் என கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.
கே.வி.ஆனந்த் பேசும்போது...
இப்ப இருக்கிற பல வெற்றிகரமான டைரக்டர்களை உருவாக்கின பெருமை எஸ்.ஏ.சி.சாருக்கு உண்டு. டைரக்டர் ஷங்கர், இவர்கிட்ட தான் 18 வருஷமா அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணியது நிறைய பேருக்கு தெரியாது. ஒரு படத்துல அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணிட்டு டைரக்டர் ஆகிட்டாங்கண்ணா, இவரு எங்கிட்ட தான் ஒர்க் பண்ண டைரக்டர்வு சொல்ற இந்த காலத்துல, இதுவரை யாரையும் என்கிட்டே அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணவங்கன்னு சொன்னதில்ல. கேட்டா நான் ஏன் சொல்லணும், வேணும்னா அவர் சொல்லட்டும்னு பெருந்தன்மையா சொல்வார். அந்த பெருந்தன்மைதான் அவரை இந்த உயரத்துல உட்கார வச்சிருக்கு.
ஆர்.வி.உதயகுமார் பேசும்போது...
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி...
இந்த திருக்குறள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம எஸ்.ஏ.சி.சாருக்கு பொருந்தும். ஏன்னா, ஒரு பையனுக்கு என்ன ஆசையோ அதை கரெக்டா நிறைவேற்றியது மட்டுமில்லாம அவர இன்னைக்கு இளைய தளபதியா உருவாகியிருக்காரு. விஜய் சார் இங்க இல்ல, நீங்க இளைய தளபதி இல்ல சார், நீங்க தான் சூப்பர் ஸ்டார். ஏன் இதை சொல்றேன்னா, எப்படி தந்தை மகனுக்கு பெருமை சேர்த்தாரோ, அதுபோலத்தான் மகன் தந்தைக்கு பெருமை சேர்த்திருக்காரு. நான் திரைப்பட கல்லூரியில் படிச்சிகிட்டு இருக்கும்போது, எஸ்.ஏ.சி. ஷூட்டிங்ல எப்படி ஷூட்டிங் பண்றாருனு பார்க்கப்போனேன். உடனே அவர்கிட்டே அசிஸ்டெண்டா சேரணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவர் அசிஸ்டெண்டுக்கு கொடுத்த அடிய பாத்து அப்படியே back வாங்கிட்டேன். சார் அப்ப உங்கள miss பண்ணிய நான் இப்ப உங்ககூட work பண்ண ஆசைப்படுறேன். தயவுசெய்து என்னையும் உங்க படத்துல நடிக்கவைங்க....
விழாவில் கவிஞர் முத்துக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஜி.தியாகராஜன் இன்னும் ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.