ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெர்மன் கலாச்சாரத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டு கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவது இதன் வேலை. தற்போது இந்த அமைப்பு ஜெர்மனியில் இருந்து 25 ஓவியர்களை வரவழைத்து சென்னையில் உள்ள சுவர்களில் ஓவியங்களை வரைந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை சத்யம் தியேட்டர் சுவரில் சினிமா தொடர்புடைய ஓவியங்களை வரைந்து வருகிறது.
அதோடு சென்னை ஜெர்மன் கலாச்சாரத்துறை தமிழ்நாட்டில் உள்ள பழமையான தியேட்டர்களை புகைப்படம் எடுத்து அதனை பாதுகாத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த ஜெர்மன் புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் வடிவமைப்பு மிகவும் கவர்ந்திருக்கிறது. அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வித்தியாசமான கட்டிட அமைப்புகள் கொண்ட 30 தியேட்டர்களை புகைப்படம் எடுத்தனர். இந்த படங்களை இப்போது ஜெர்மன் கலாச்சரத்துறை கண்காட்சியாக வைத்துள்ளது.