ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
இயக்குனர் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்ஷன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படத்துக்கு திரும்புகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரபுதேவா மீண்டும் இந்திப்படம் இயக்குகிறார்.
சிங் இஸ் பிளிங் என்பது அடுத்த படத்தின் டைட்டில் இதிலும் அக்ஷய்குமார்தான் ஹீரோ. கீர்த்தி சனம் ஹீரோயின். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, கோவா, மும்பை, பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. மேற்கண்ட இடங்களுக்கு சென்று லொக்கேஷன் தேர்வு செய்து விட்டு வந்திருக்கிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் பிரபல தமிழ் க்ரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரின் வெல்வெட் குற்றங்கள் நாவலை பிரபுதேவா இந்தியில் சினிமாவாக எடுக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெல்வெட் குற்றங்கள் சமீபத்தில் ராஜேஷ்குமார் ஒரு வாரஇதழில் தொடர்ந்து எழுதிய நாவல். விமானக் கடத்தல் தொடர்பான பரபரப்பான நாவல். இந்த நாவலை படமாக்குவது குறித்து பிரபுதேவா ராஜேஷ்குமாருடன் பேசி வருகிறார். பிரபுதேவா அடுத்து இயக்கும் படமான சிங் இஸ் பிளிங், ராஜேஷ்குமார் கதையா, அல்லது வேறு கதையா என்று தெரியவில்லை.
ராஜேஷ்குமார் எழுதிய அகராதி, சிறுவாணி நாவல்கள் ஏற்கெனவே திரைப்படமாகியிருக்கிறது. தற்போது 2 ஆயிரம் அடி சொர்க்கம் என்ற நாவல் படமாகி வருகிறது. சரத்குமாரின் சண்டமாருதம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ரஜேஷ்குமார்.