பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இயக்குனர் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்ஷன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படத்துக்கு திரும்புகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரபுதேவா மீண்டும் இந்திப்படம் இயக்குகிறார்.
சிங் இஸ் பிளிங் என்பது அடுத்த படத்தின் டைட்டில் இதிலும் அக்ஷய்குமார்தான் ஹீரோ. கீர்த்தி சனம் ஹீரோயின். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, கோவா, மும்பை, பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. மேற்கண்ட இடங்களுக்கு சென்று லொக்கேஷன் தேர்வு செய்து விட்டு வந்திருக்கிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் பிரபல தமிழ் க்ரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரின் வெல்வெட் குற்றங்கள் நாவலை பிரபுதேவா இந்தியில் சினிமாவாக எடுக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெல்வெட் குற்றங்கள் சமீபத்தில் ராஜேஷ்குமார் ஒரு வாரஇதழில் தொடர்ந்து எழுதிய நாவல். விமானக் கடத்தல் தொடர்பான பரபரப்பான நாவல். இந்த நாவலை படமாக்குவது குறித்து பிரபுதேவா ராஜேஷ்குமாருடன் பேசி வருகிறார். பிரபுதேவா அடுத்து இயக்கும் படமான சிங் இஸ் பிளிங், ராஜேஷ்குமார் கதையா, அல்லது வேறு கதையா என்று தெரியவில்லை.
ராஜேஷ்குமார் எழுதிய அகராதி, சிறுவாணி நாவல்கள் ஏற்கெனவே திரைப்படமாகியிருக்கிறது. தற்போது 2 ஆயிரம் அடி சொர்க்கம் என்ற நாவல் படமாகி வருகிறது. சரத்குமாரின் சண்டமாருதம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ரஜேஷ்குமார்.