கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அக்ஷய் குமார், தன்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் என்று அழைப்பதை, என் மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. என்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைத்தால் போதும். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி எனக்கு வேண்டாம். படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே தான் நடித்து வருகிறேன். ஆண்டிற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும், ஆனால், அத்தகைய படங்கள், எனது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக மற்றும் நல்ல கருத்துகளை சொல்பவையாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.