இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கொம்பன் படத்தையடுத்து காஷ்மோரா படவேலைகளில் இறங்கி விட்டார் பருத்தி வீரன் கார்த்தி. இந்த நிலையில் மெட்ராஸ் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு அவரை வைத்து படம் இயக்க புது வரவு டைரக்டர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் அவரை தற்போது ஓரிரு படங்கள் இயக்கியவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் அவரது கதை இலாகா கதை கேட்பதில் முன்பைவிட தீவிரமடைந்துள்ளது.
அப்படி செல்பவர்களிடம் வழக்கம்போல் முதலில் கார்த்தி கதை கேட்பதில்லை. கதை கேட்பதற்கென்றே அவர் வைத்திருக்கும் கதை இலாகாதான் கதை கேட்கிறார்கள். அப்படி அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கதை வீதம் கேட்கிறார்களாம். ஒரேநாளில் பல கதைகள் கேட்டால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பதால் இதை பின்பற்றுகிறார்களாம். இவர்கள் ஓகே என்று தேர்வு செய்யும் கதையை கடைசியில் அனைவரும் உட்கார்ந்து ஒருமுறை கேட்கிறார்களாம். அப்போதும் அது திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அந்த கதையை டிக் அடித்து கார்த்தி பாசறைக்குள் அனுப்பி வைக்கிறார்களாம்.