டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. சில தினங்களுக்கு முன்னர் நயன்தாரா, டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று இணையதளங்களில் வௌியானது. நயன்தாரா, நிஜமாகவே சென்று பீர் வாங்கினாரா என்று பலரும் விவாதிக்க தொடங்கிய நிலையில், அவர் நடித்து வரும் ஒரு படத்தில் தான் இந்த காட்சி இடம்பெறுவதாக பின்னர் தெரியவந்தது. இந்தக்காட்சியை படமாக்கியபோது அதை யாரோ செல்போனில் திருட்டு தனமாக எடுத்து இணையதளத்தில் பரப்பிவிட்டனர்.
இதனிடையே நயன்தாரா படத்திற்காகத்தான் பீர் வாங்கினார் என்றாலும் அதை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகிவிட்டனர் இந்து மக்கள் கட்சியினர். இதுகுறித்து அந்த கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. மேலும் தமிழகத்தில் மதுகுடித்து இறந்து போன ஆண்களின் எண்ணிக்கை 20 லட்சம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
இந்தசூழலில் நடிகை நயன்தாரா, டாஸ்மாக்கிற்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. மேலும் பெண்களை குடிக்க தூண்டுவது போல் இந்த காட்சி உள்ளது, எனவே இந்தக்காட்சியை சம்பந்தப்பட்ட படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் நயன்தாராவுக்கு எதிராகவும், அந்தப்படத்திற்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.