டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
என்னை அறிந்தால் படத்திற்காக, அஜித், 32 மணிநேரம் தொடர்ச்சியாக டப்பிங் பேசியதாக, இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.
அஜித்தின் நடிப்பு அர்ப்பணிப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினர் பலரும் பாராட்டிவரும் நிலையில், அந்த பட்டியலில், தற்போது, இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து, இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளதாவது, “நிறைய பேர் பார்க்காத அஜித்தை இப்படத்தில் காட்டியிருக்கிறேன். அனைவருமே குடும்பத்தோடு இப்படத்தை பார்க்கலாம். உங்களுக்கு ஏற்றமாதிரி சில காட்சிகள் எல்லாம் வைக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னேன். உங்களுக்கு எது சரினு படுதோ அதை செய்யுங்கள். உங்க ஸ்டைலிலேயே படம் இருக்கட்டும் என்று சொன்னார் அஜித்,. இதுவரைக்கும் 14 படங்கள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய படங்களில் இந்தப் படத்தை என்னோட பெஸ்ட் படம்னு சொல்வேன். பெண்களுக்கு இந்தப் படம் ரொம்பவும் பிடிக்கும். இது ஒரு எமோஷனலான ஆக்ஷன் த்ரில்லர். அஜித் சார் இதுல 25 வயசுல இருந்து 40 வயசு வரைக்கும் வர்ற தோற்றங்கள்ல நடித்திருக்கிறார். இதுக்காக ஸ்பெஷல் மேக்கப் எல்லாம் போடவில்லை. யதார்த்தமா ஒருத்தர் எப்படி அந்தந்த காலகட்டங்களில் இருப்பாரோ, அப்படித்தான் அஜித் தன்னை மாற்றிக் கொண்டார். இப்படத்திற்காக தொடர்ந்து 32 மணி நேரம் அஜித் டப்பிங் பேசினார். இப்படத்தில் அஜித்திற்கு அவ்வளவு ஈடுபாடு. இப்படத்தோட கதை என்னவென்று முழுமையாக சொல்ல முடியாது. க்ரைம், கேங்ஸ்டர், போலீஸ், டான்சராக இருக்கிற ஒரு பெண், மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற ஒரு பெண், ஒரு வில்லன் இவர்களைச் சுற்றி நடக்குற விஷயங்கள் தான் படத்தோட கதை. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு கிடைத்தால், இப்படத்தின் இரண்டாம் பாகம் பண்ணனும் என்ற ஆசையும் இருக்கிறது." என்று தெரிவித்தார் கெளதம் மேனன்