தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய சினிமாவின் பிரமாண்டமாக கருதப்படும் பாகுபலி படத்தின் படப்படிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது அது நிறைவு பகுதிக்கு வந்திருக்கிறது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ் நடிக்கிறார்கள். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், கீரவாணி (மரகதமணி) இசை அமைக்கிறார்.
தற்போது படத்தின் வசனகாட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கபட வேண்டியது இருக்கிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தெலுங்கு, தமிழில் டப்பிங் பணிகள் முடிந்து விட்டது. தமிழ் வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் கீரவாணி 24 மணிநேரமும் படத்துக்கு பின்னணி இசை சேர்த்து வருகிறார்.
படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 6 விஎப்எக்ஸ் ஸ்டூடியோக்கள் மற்றும் ஹாங்காங், அமெரிக்காவில் உள்ள ஸ்டூடியோக்களில் விசுவல் எபெக்ஸ்ட் பணிகள் நடக்கிறது. தேசிய விருது பெற்ற பி.எம்.சதீஷ் சவுண்ட் டிசைனராகவும், தெபஜிதி சால்மாஸ் சவுண்ட் மிக்சராகவும் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் டிஐ பணிகள் அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியிடப்பட இருக்கிறது.