வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி நடிக்கும் பொங்கி எழு மனோகரா படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகிறது. சில படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கும் இர்பானுக்கு இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி கூறியதாவது:
ஒரு பால்கார இளைஞனுக்கு வரும் இரண்டு காதல்கள்தான் கதை. பால்காரனாக இர்பான் நடிக்கிறார், அவரது காதலிகளாக அர்ச்சனாவும், அருந்ததி நாயரும் நடிக்கிறார்கள். 1990களில் நடக்கும் கதை. இதனால் அந்த சாயலில் உள்ள ஒரு கிராமத்தை தேடிச் சென்று படமாக்கி இருக்கிறோம்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் இர்பானை மாடுகளிடம் பால் கறக்கச் சொல்லி பயற்சி கொடுத்தோம். நிஜத்தில் பணக்காரவீட்டு பையனான இர்பான் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார். அப்படி இருந்தும் படப்பிடிப்பில் பால்கறக்கும் காட்சியில் மாட்டிடம் நிறைய உதை வாங்கியிருக்கிறார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் ரமேஷ் ரங்கசாமி.