பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மதுமிதா இயக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படம் தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் தயாராகிறது. எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். இதில் தமிழில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார், தெலுங்கில் ராக்கி ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு மொழிக்கும் ஹீரோயின் அதிதி செங்கப்பா. காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் அனைத்தும் இரண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கப்பட்டதால் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் அதிதி.
இதுபற்றி அவர் கூறியதாவது: வசன காட்சிகளில் தெலுங்கு வசனத்தை சரளமாக பேசி விடுவேன். தமிழ் வசனம் பேச திணறுவேன். இதனால் வெங்கி காட்சி ஓரிரு டேக்கில் முடிந்து விடும், அர்ஜுன் காட்சி நிறைய டேக் போகும். பாடல் காட்சியில் வெங்கி நிறைய டேக் எடுத்துக்குவார். அர்ஜுன் ஓரிரு டேக்கில் ஓகே பண்ணிவிடுவார். இருவரையும் சமாளிப்பது சிரமமாக இருந்தது.
நம்மை விட அவருடன் நடிக்கும்போது நன்றாக நடிக்கிறார், ஆடுகிறார் என்கிற பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக நடிக்க வேண்டியது இருந்தது. இயக்குனர் மதுமிதா சாதுர்யமாக அதனை சமாளித்தார். அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். என்கிறார் அதிதி.