டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோவையில் நடந்த ஒரு தனியார் நிறுவன அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது: தலை முடி நம் பரம்பரையோடு சம்பந்தப்பட்டது . ஒரு தலைமுடியை வைத்து நம் சரித்திரத்தையே சொல்லமுடியும். அப்படிப்பட்ட தலைமுடிக்கு நாம் செய்யும் துரோகம் என்னவென்று தெரியுமா? குளித்துவிட்டு ஈரத்தலையோடு தலைவாரிக்கொள்வது. அதன் மூலம் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. நம் தலையில் இருந்து முடி உதிரத் தொடங்குகிறதா? நம் உடலில் எதோ நோய் இருக்கிறது என்று அர்த்தம். தலையை மின் உலர்த்தியைக் கொண்டு உலர்த்தாதீர்கள் அது முடிக்கு கேடு. இயற்கையாக வெயிலில் வைத்து உலர்த்துங்கள்.
இயற்கையானதையே பயன்படுத்துங்கள். நான் தினமும் நான்கு கருவேப்பிலை இலைகளை கழுவி மென்றுவிட்டுத்தான் வெளியில் கிளம்புகிறேன். முருங்கைக்கீரை, துளசி இலை சாப்பிடுங்கள். இயற்கை முறைக்கு மாறுங்கள். தலைமுடி சரும நோய்களுக்கு மற்றொரு காரணம் குடி. அது எல்லா வகையான கெடுதல்களையும் கொண்டு வருகிறது. இளைஞர்களை சீரழிக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள். இவ்வாறு வைரமுத்து பேசினார்.