இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜஜ்பா பட சூட்டிங்கில், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவிற்காக, சிறப்பு கேரவன் வரவழைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன், தற்போது ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ஜஜ்பா படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா, இதுகுறித்து கூறியதாவது, எனக்கும் 2 குழந்தைகள் உள்ளன. சிறு குழந்தைகளை பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நேரில் அனுபவித்தவன். ஐஸ்வர்யா நடிப்பில் படம் இயக்க வேண்டும் என்ற கனவு, இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நடிப்பதன் மூலம், ஐஸ்வர்யா ராய்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக, அவரது குழந்தை ஆரத்யாவிற்காக, சிறப்பு கேரவன் வரவழைத்துள்ளேன். அந்த வேனில், எனது குழந்தைகளுடன், ஆரத்யாவும் இணைந்து விளையாடி வருவதாக சஞ்சய் குப்தா கூறினார்.