'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
திரைப்பட நட்சத்திரங்கள் என்றாலே சினிமாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை சமந்தா. சற்று முன் அவர் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து ஒரு டிவீட் செய்துள்ளார். இதற்கு முன்னும் சமந்தா பல சமயங்களில் அவருடைய கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னதுண்டு.
“அனைத்து மக்களுக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகள். அமைதி, முன்னேற்றம், வளமையும் உண்டாகட்டும். இந்தியராக இருக்கப் பெருமை. அதிபர் ஒபாமா இங்கே வந்திருப்பது அரசியலுக்கு மிகச் சிறந்த விஷயமாகும். வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாகவும் திகழ்கிறது. மோடியைப் புகழ்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தக் கருத்து விமர்சிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், தான் சொல்ல நினைப்பதை, தன்னுடைய கருத்தை வெளிப்படையாகச் சொல்லி வருபவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை விட்டு விலகிய பின் ஒரு வேளை அரசியலில் ஈடுபடுவாரோ....?