தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை அஞ்சலி சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள பப் ஒன்றில் குடித்து விட்டு போதையில் கலாட்டா செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் குடித்து விட்டு எந்த கலாட்டாவும் செய்யவில்லை என அஞ்சலி விளக்கமளித்துள்ளார்.
“வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஐதராபாத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் திரும்பினேன். கடந்த வெள்ளிக்கிழமையன்று எனது தோழிகளுடன் ரெஸ்டரென்ட் ஒன்றிற்கு சென்றேன். அப்போது சில புகைப்படக்கார்ர்கள் என்னை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நான் இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி, அதனால் இங்கெல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டேன்.
அந்த ரெஸ்டரென்டில் நான் ஜுஸுக்குதான் ஆர்டர் கொடுத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் தொலைக்காட்சிகளில் நான் குடித்து விட்டு தகராறு செய்ததாக செய்திகள் வெளியாகின. அது ஆதாரமற்ற முற்றிலும் தவறான செய்தி. என்னுடைய இரண்டு தோழிகளும் அவர்களுடைய கணவர்களுடன் வந்திருந்தார்கள், நான் மட்டும் தனியாக வந்தேன். அப்படியிருக்க நான் பாய் பிரண்டுடன் வந்ததாக எப்படி செய்தி வெளியிடலாம். 15 நிமிடங்களுக்குள் அந்த இடத்தை விட்டு நான் சென்று விட்டேன். அதன் பின் யார் புகார் செய்தது, ஏன் போலீஸ் வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது,” என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.
அஞ்சலி இதற்கு முன்னும் இதேபோல் பிரச்சனை செய்ததாக செய்திகள் வெளிவந்தன. திரும்பும் அம்மாதிரியான ஒரு செய்தி வெளியாகி, அதற்கு அஞ்சலியும் மறுப்பு தெரிவித்துள்ளார்.