ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், லாலிசம் என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை துவக்கியுள்ளதும், வரும் ஜன-31ல் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கும் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழா கொண்டாட்டத்தின் போது இதன் முதல்ஷோவை நடத்த இருக்கிறார் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்த செய்திதான். ஆனால் இந்த விழாவில் தனது இசைக்குழு மூலமாக நிகழ்ச்சிகளை நடத்த கேரள அரசிடம், மோகன்லால் இரண்டுகோடி ரூபாய் கேட்டார் என ஒரு வதந்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது..ஆனால் இந்த வதந்தி பரவிய கொஞ்ச நேரத்திலேயே கேரள அரசு தரப்பிலிருந்து, மோகன்லால் அப்படி ஏதும் பணம் கேட்கவில்லையென உண்மையை விளக்கும் விதமாக பதில் அளிக்கப்பட்டதும் தான் பரபரப்பான நிலைமை சற்றே சீரானது. கேரளத்தில் உள்ள ஒரு மூன்றாம் தர இணையதளம் ஒன்றுதான் பரபரப்புக்காக இந்த செய்தியை வெளியிட்டதாகவும், அது மோகன்லாலுக்கு எதிராக வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல ஆனதால் அந்த வதந்தியை அப்படியே அவர்கள் ஊதி பெரிதாக்கி விட்டதாகவும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.