ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத்-கெளதம்மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் என்னை அறிந்தால். பொங்கலுக்கு ரிலீசாகயிருந்த அப்படம் பின்னர் ஜனவரி 29ந்தேதியாகி, இப்போது பிப்ரவரி 5-ந்தேதியில் வெளியாகயிருப்பதாக அப்பட தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் அறிவித்திருக்கிறார். அதோடு, படத்தை தமிழகமெங்கும் அவரே வெளியிடுகிறாராம்.
இந்த நிலையில், படத்தின் தாமதத்திற்கு அஜீத்திற்கும், கெளதமமேனனுக்குமிடையே ஏற்பட்ட க்ளைமாக்ஸ் பிரச்சினைதான் என்று வெளியான செய்திகள் குறித்து அவர் கூறுகையில், என்னை அறிந்தால் படத்தில் முதலில் எப்படி கதை சொன்னாரோ அதேபோலவே இப்போது படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். அந்த வகையில், ஆரம்பத்தில் சொன்ன அதே க்ளைமாக்ஸ்தான் படமாகியுள்ளது.