ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் இந்தி சினிமாவின் மெகா ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் மற்றும் திலீப்குமாருக்கு இருவரும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இயக்குநர் ஜானு பருவாவும் பத்ம பூஷண்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை தவிர,கலைத்துறையில், கன்னியாகுமரி அவசரலா, நரேஷ் பேடி, இயக்குநர்சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், ரவீந்தர ஜெயின், பரசூன்ஜோஷி, பிரபுலா கர், தாரக்மேதா, நெயில் ஹெர்பர்ட், ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள, 104 பேருக்கும், வரும் மார்ச் அல்லது ஏப்ரலில், ஜனாதிபதி விருதுகளை வழங்குவார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.