தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புற்றுநோயை கண்டு மனம் துவளாமல், அதை எதிர்த்து வெற்றியும் கொண்ட கவுதமி தான் நிஜ ஹீரோ என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
ஆந்தி்ர மாநிலம் ஐதராபாத்தில், சர்வதேச புற்றுநோய் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை, நடிகர் கமலஹாசன் துவக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, புற்றுநோய் வந்தால், அத்தோடு நம் வாழ்க்கை முடிந்துவிட்டது, விரைவில் இறந்து விடுவோம் என்று பலர் நினைக்கிறார்கள். இது வெறும் பயம்தான். புற்றுநோயை உடனடியாக கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கவுதமிதான். புற்றுநோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாக போராடினார். இறுதியில் அதனை விரட்டினார்.