ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் வித்தியாசமான ஹீரோயின் என அபர்ணா கோபிநாத்தை சொன்னால், அதற்கு நூறு சதவீதம் அவர் பொருத்தமானவர்தான். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடித்திருப்பார்.. துல்கருடன் நடித்த 'ஏபிசிடி', ஆசிப் அலியுடன் 'பைசைக்கிள் தீவ்ஸ்', மம்முட்டியுடன் நடித்த 'முன்னறியிப்பு' என மூன்று படங்களையும் அதற்கு உதராணம் காட்டலாம்.
இப்போதும் அவருக்கு 'ஒண்ணாம் லோக மஹாயுதம்' என்கிற படத்தில் 'அசிஸ்டன்ட் கமிஷனர் தாரா' என்கிற கம்பீரமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. இந்தப்படத்திற்காக அவர் சண்டைக்காட்சிகளிலும் நடிக்கவேண்டியிருந்தது.. போலீஸ் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டு சண்டைக்காட்சிகளில் நடிக்க பயந்தால் எப்படி? ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் ரன் ரவி சொன்னதையும் மீறி டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்து படப்பிடிப்பு குழுவினரை அசத்தியுள்ளார் அபர்ணா கோபிநாத்.