'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழில் மட்டுமே பிரபலமாக இருந்த தனுஷ், கொலவெறி.... எனும் ஒரே பாடல் மூலம் உலகபுகழ் பெற்றார். இப்படி தன் சினிமா கேரியரை மாற்றி அமைத்த அந்த கொலவெறி பாடல் தனுஷூக்கு பிடிக்காதாம். அதைக்கேட்டாலே வெறுப்படைகிறாராம். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, கொலவெறி பாடல் உருவானது ஒரு விபத்து தான். ஆனால் அது இந்தளவுக்கு புகழ் பெறும் என்று நினைக்கவில்லை. என் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளது என்றார். ஆனால் இந்தப்பாட்டை நான் கேட்கவே மாட்டேன், என்னுடைய ஐ-பாட், ஐ-பேட், செல்போன், கம்யூட்டர் உள்ளிட்ட அத்தனை சாதனங்களிலும் இந்தப்பாட்டை அழித்துவிட்டேன். இந்தப்பாட்டை கெட்டால் சலிப்பு தான் வருகிறது என்று வெறுப்பாக கூறுகிறார் தனுஷ்.
தனுஷ், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன் உடன் ''ஷமிதாப்'' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி முதல்வாரத்தில் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படம் தொடர்பான புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.