இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா போன்று ஆக்ஷன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடிக்க மிகுந்த விருப்பமாக இருப்பதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார்.
டாலி கி டோலி படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த நடிகை சோனம் கபூர், டாலி கி டோலி படத்தில் தனது கேரக்டர் பற்றியும், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் அனுபவங்கள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
பலருடன் சேர்ந்து நடித்து வருவதென்றாலும், இதில் உங்களுக்கு முக்கிய கேரக்டர்? எப்படி இதை உணர்கிறீர்கள்?
டாலி கி டோலி படம், நான் பலருடன் சேர்ந்து நடித்துள்ள மூன்றாவது படம். இருந்தபோதிலும், இதில் எனக்கு முக்கிய வேடம். பலருடன் சேர்ந்து நடிப்பது புதுவித அனுபவமாக இருக்கிறது. அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது கேப்டன் போன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். வெற்றியா? இல்லை தோல்வியா என்பதை, நான் எப்போதும் கணக்கில் கொள்வதில்லை. குழுவினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
பேபி படத்துடன் உங்கள் படமும் வெளிவந்துள்ளதே?
ஆண்டிற்கு 52 வாரங்கள். எனவே ஆண்டிற்கு 52 படங்கள் மட்டுமே வெளிவர வேண்டும் என்று நினைத்தால், சினிமா துறையே முடங்கிவிடும். படங்கள் நிறைய தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றை உரியநேரத்தில் வெளியிடுவதும் அவசியமானதாக உள்ளது. சிலர் கான் நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, தங்கள் படங்கள் வெளியாவதை விரும்புவதில்லை. இது தேவையில்லாத ஒன்றாகும். ஹெய்டர் படமும், பேங் பேங் படமும் ஒரே நாளில் வெளியானது. ஹெய்டர் படத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்காதவர்கள், பேங் பேங் படத்திற்கு சென்றனர். இறுதியில், இரண்டு படங்களுமே, சூப்பர்ஹிட் ஆனது. பேபி படத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்காதவர்கள், டாலி கி டோலி படத்திற்கு செல்வர். இரண்டு படங்களும், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் தான் . எனவே இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது.
சல்மானிற்கு ஜோடி என்றால், படம் முழுக்க வரமுடியாதே? அதை எப்படி தாங்கள் சமாளித்தீர்கள்?
பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க, படம் முழுமைக்கும் வர வேண்டும் என்ற அவசியமில்லை. படத்தில் சிறிதுநேரமே வந்தாலும், மக்களின் மனதில் நிலைக்கும் வகையில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நடிகை என்றாலே, 3 சீன், 4 பாடல்களுக்கு மட்டுமே வர வேண்டும் என்ற கருத்தை நான் ஆணித்தரமாக எதிர்ப்பவள். டெல்லி 6 படத்தில், 25 நிமிடங்கள் மட்டுமே நான் நடித்துள்ளேன். இருந்தபோதிலும், அதில் எனது கேரக்டர் முக்கியமானதாக அமைந்திருந்தது. அதேபோல், பாக் மில்கா பாக் படத்தில், நான் 10 நிமிடங்கள் மட்டுமே நடித்துள்ளேன். அதிலும் எனக்கு வலுவான கேரக்டர் தான். பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில், சல்மான் கானிற்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்த படம் முழுமைக்கும் நான் வருகிறேன். அழகாக இருக்கிறோம் என்பதற்காக நான் படத்தில் நடிக்க வரவில்லை. நான் எதை செய்தாலும், அதில் என் திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பவள் நான். முதலிடத்திற்கு செல்ல நான் எப்போதும் விரும்பியதில்லை.
2015ம் ஆண்டில் எந்த மாதிரி படங்களில் நடிக்க உள்ளீர்கள்?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு இப்போதைக்கு எதுவுமே தெரியாது. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்பதே, எனது எண்ணமாக உள்ளது. எனக்கு இந்த ஆணடு, சென்ற ஆண்டு என்ற வித்தியாசத்தை எப்போதுமே, நான் உணர்ந்ததில்லை.
ஆக்ஷன் படங்களில் நடிப்பீர்களா?
தெரியவில்லை. ஆக்ஷன் படங்கள் எடுக்க வேண்டுமென்றால், அதிகமாக செலவாகும். சால்ட் படத்தில் நடித்த ஏஞ்சலினா ஜோலி போன்ற கேரக்டர்களில் நடிக்க வேண்டுமென்பது எனது கனவாக உள்ளது. விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன்.
டாலி கி டோலி படத்தில் நடிக்க சிரமப்பட்டீர்களாமே?
டாலி கி டோலி படத்தில் எனது கேரக்டரை மிகவும் விரும்பி செய்தேன். வட இந்திய பெண் போன்ற கேரக்டரை செய்வதற்கு முதலில் சிரமப்பட்டேன். பின் படக்குழுவினர் கொடுத்த ஆதரவினால், விரைவில் அந்த கேரக்டராகவே மாறிவிட்டேன். இந்த படத்தில் எனது பாடி லாங்குவேஜ் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நான், உண்மையில் எப்படி இருப்பேனோ, அதே கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ளேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக சோனம் கபூர் கூறினார்.