ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால், அண்டைநாடுகளுடனான நட்பை பலப்படுத்துவேன் என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். கிஸ்மத் லவ் பைசா தில்லி படத்தின் தோல்விக்கு பிறகு, சில காலம், திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த மல்லிகா ஷெராவத், தற்போது, டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மூலம், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மல்லிகா கூறியதாவது, தூய்மையான அரசியலே, நாட்டின் தற்போதைய இன்றியமையாத தேவையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால், அண்டைநாடுகளுடனான நட்பை பலப்படுத்துவேன். தூய்மையான அரசியல் மேற்கொள்வேன். நான் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் தூய்மையான அரசியலையே விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.