இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவர் லீசா சாம்சன் மற்றும் 9 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். தணிக்கை குழு விவகாரங்களில் அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு, மத்திய தணிக்கை குழுவின் புதிய தலைவராக பிரபல தயாரிப்பாளர் பசுலாஜ் நிஹாணியை நியமித்துள்ளது.
அதேபோல ராஜினாமா செய்த உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும், ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஜீவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருமே சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர இந்தி கதாசிரியர் மிஹிர் புடா, நடிகர் ஜார்ஜ் பேகர், வாணி திரிபாதி, அசோக் பண்டிட், சந்திரசேகர் பிரசாத், சையது அப்துல், ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்கள்.