பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்களுக்கு, தனுஷ் மாதிரி ஒரு நடிகராக வரவேண்டும் என்பதுதான் டார்கெட்டாக உள்ளது. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிகரானபோதும், என்னை கவர்ந்த நடிகர்களின் தனுஷ் முக்கியமானவர். அதோடு நானும் அவரை மாதிரியான வேடங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். அதோடு, தனுஷ் ராஞ்ஜனாவில நடிக்க இந்திக்கு சென்று விட்டதால் அவர் இடத்தை பிடிக்கப்போகிறேன் என்று ஓப்பனாகவே சொன்னார்.
ஆனால், அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தனுஷ். இந்த இடத்தை பிடிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்திருக்கிறேன். அதனால் எனக்கான இடத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 12 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் அதுபற்றி யோசிக்கலாம் என்று ஸ்டேட்மென்ட் விட்டார்.
இந்தநிலையில், தற்போது டார்லிங் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசின் நடிப்பைப்பார்த்த சில சினிமா நண்பர்கள், அவரது நடிப்பும் தனுஷ் மாதிரியே இருக்கிறது. அதனால் அடுத்த தனுஷ் வந்து விட்டார் என்று இப்போது கோலிவுட்டில் பில்டப் கொடுத்து வருகின்றனர்.
இதனால் மனதளவில் அதிர்ச்சியடைந்திருக்கும் தனுஷ், இனிமேல் என்னதான் இந்தி படங்களில் நடித்தாலும் தமிழில் வருடம் 2 படங்களாவது நடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதோடு, வருடம் 2 படங்களை தயாரித்து வெளியிட வேண்டும் என்பதும் தனுஷின் புதிய திட்டமாகி உள்ளதாம்.