ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 10 ஆண்டுகளாக, ஒரு ஆண்டில் அதிக பாடல்களை எழுதி முதலிடத்தை பிடிக்கிறவர் நா.முத்துகுமார். இந்த ஆண்டும் 107 பாடல்களை எழுதி முதலிடத்தை பிடித்திருக்கிறார். 35 படங்களில் இந்த பாடல்களை எழுதியுள்ளார். அதில் 10 படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
தேவதையை தேட (பூஜை), வாங்க மக்கா வாங்க (காவியத் தலைவன்), அழகே அழகு (சைவம்), உன் ஆசை என் காதில் சொன்னால் (நான் சிவப்பு மனிதன்) துளி துளியாய் (இராமானுஜன்) உள்பட 20 பாடல்கள் ஹிட்டாகி உள்ளது. தற்போது 101 படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர்களிலும் நா.முத்துகுமார் முதலிடத்தில் இருக்கிறார்.
2014ம் ஆண்டில் தங்க மீன்களின் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக தேசிய விருது, பிலிம்பேர் விருது, நார்வே திரைப்பட விருது... சைமா விருது உள்பட 9 விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் பல பாடல்களுக்காக 4 விருதுகள் பெற்றிருக்கிறார்.