மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்று படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டு, கதை இல்லாத படம் என்று விளம்பரம் செய்தார் பார்த்திபன். அவர் எதிர்பார்த்ததுபோலவே 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்ல, விமர்சன ரீதியாகவும் பார்த்திபனுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த சென்னை சர்வதேச திரைப்படவிழாவில்கூட இந்தப்படத்துக்கு விருது கிடைத்தது. 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றி பார்த்திபனுக்கு மிகப்பெரிய உற்காகத்தை அளித்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் பார்த்திபன். அதற்கு 'கதை இருக்கு' என்று தலைப்பு வைத்துள்ளார். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கதையின் நாயகியாக நடித்த அகிலா கிஷோரே இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கெஸ்ட்ரோலில் தலையைக்காட்டிய ஆர்யா, விஜய்சேதுபதி உட்பட அனைவரையும் இரண்டாம் பாகத்திலும் பங்குபெற செய்ய பார்த்திபன் திட்டமிட்டுள்ளாராம். கதை இருக்கு என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் இந்தப்படத்தில் தலைப்புக்கு மாறாக கதை இருக்காதாம்.