ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாளத்தில் ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். கதாநாயகி வேடங்களில்தான் நடிப்பேன் என்று மற்ற நடிகைகளைப்போன்று கண்டிசன் போடாமல், அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தால் தனது வயதுக்கு மீறிய வேடங்களிலும் நடித்திருக்கிறாராம் அவர்.
அந்த வகையில், மியா ஜார்ஜின் நடிப்பை சில படங்களில் பார்த்து வியந்து போன ஆர்யா, தனது தம்பியை வைத்து தான் தயாரித்த அமரகாவியம் படத்துக்காக அவரை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்தார். அவர் எதிர்பார்த்தபடியே அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் மியா. சத்யா நடிப்பில் முதிர்ச்சி இல்லாதபோதும் தனது நடிப்பால் அதை சரிபண்ணி காண்பித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது விஷ்ணு நடிக்கும் இன்று நேற்று நாளை என்ற படத்திலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் மியா சிறப்பாக நடிக்கக்கூடியவர் என்பதால் ரொம்ப கவனமாக அவருடன் நடித்து வருகிறார் விஷ்ணு இதையடுத்து மேலும் சில படங்களிலும் மியாவை நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கிறது.
ஆனால் அப்படி தன்னைத்தேடி வரும் படங்களை ஹீரோ யார், எத்தனை கோடி பட்ஜெட் என்றெல்லாம் சில நடிகைகளைப்போன்று கேட்காமல், கதையையும், அதில் தனது கதாபாத்திரத்தின் பங்கையும் மட்டுமே கவனமாக கேட்கிறாராம் மியா மேலும் சில டைரக்டர்களிடம் கதை கேடடிருப்பவர், அந்த கதையில் நடிப்பது பற்றி எந்த வாக்குறுதியும் அளிக்காமல், இந்த கதை எனக்கு செட்டாகுமா? என்பதை சற்று யோசித்து விட்டு சொல்கிறேன் என்றும் சொலலி அனுப்பியிருக்கிறாராம் மியா ஜார்ஜ்.
முன்னணி ஹீரோ படம் என்றது கதையைகூட கேட்காமல், ஓகே சொல்லி விடும் நடிகைகளுக்கு மத்தியில் ஹீரோ யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. என்னுடைய கதாபாத்திரம்தான் முக்கியம் என்று மியா சொன்னதை அவரிடம் கதை சொல்லிவிட்டு திரும்பிய இய்க்குனர்கள் இந்த காலத்தில் இப்படியொரு நடிகையா? என்று தங்களது வியப்பை வெளிப்படுத்துகின்றனர்.