ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாஜி நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது நட்பை புதுப்பித்து கொள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வர். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்பர். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் ஏற்றுக்கொண்டார்.
இந்தாண்டு நடக்கும் நிகழ்ச்சியை நடிகை ராதிகா ஏற்று கொள்கிறார். ராதிகாவின், ரேடான் மீடியாஸ் சார்பில் ரேயான் ராதிகா முன்னின்று நடத்த இருக்கிறார். இந்தமுறை பெரிய விழாவாக கொண்டா இருக்கிறார்கள். அதில், இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோரை கவுரவப்படுத்த இருக்கிறார்கள். ஆனால் பாலசந்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது. அதேப்போன்று இயக்குநர் பாக்யராஜூம் பங்கேற்கவில்லை. தனது குருநாதர் பாரதிராஜா விருது பெறுவதால் அவரோடு சேர்ந்து நானும் விருது பெறுவது சரியாக இருக்காது என்று கருதுகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 24ம் தேதி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருக்கிறது. விருது நிகழ்ச்சியோடு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறதாம்.