ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இடம் பொருள் ஏவல் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. முதல் முறையாக வைரமுத்து - யுவன் கூட்டணியில் வந்திருக்கும் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆல்பம் உருவானதில் ஒரு சுவாரசியமான பின்னணி கதை இருக்கிறது. உணர்வுபூர்வமான களங்களில் இயங்கும் சீனுராமசாமியின் படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்பது வைரமுத்துவின் இளையமகனான கபிலன்வைரமுத்துவின் விருப்பம். இடம் பொருள் ஏவல் பாடல் வேலைகள் தொடங்கும்போது “கபிலா.. அப்பாவும் யுவனும் இணையும் முதல் படம் - இந்த படத்துல நீ இரண்டு பாட்டு எழுதணும்” என்று சீனுராமசாமி அழைத்திருக்கிறார். அதற்கு கபிலன்வைரமுத்து “இரண்டு பேரும் இணையறது ஒரு அழகான அக்கேஷன். இதுல எல்லா பாட்டையும் அப்பாவே எழுதினாதான் முழுமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். அவரே எல்லா பாடல்களையும் எழுதட்டும்” என்று மெளனமாக விலகிவிட்டார். சீனுராமசாமி இதை எதிர்பார்க்கவில்லை. படத்தின் ஆடியோ வெளிவரும்வரை வைரமுத்துவிற்கே இது தெரியாது என்பதுதான் ப்யூட்டி.