பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நீதிமன்ற உத்தரவின்படி அடுத்த மாதம் 25ந் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. நாளை (டிச 23) முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. 26ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இந்த தேர்தலில் கடும்போட்டி இருக்கும் என்று தெரிகிறது. கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியும், நாசரின் மனைவி கமீலா நாசர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடும் என்று தெரிகிறது. இதற்கிடையில் நானும் தனி அணி அமைத்து போட்டியிடுவேன் என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த 5 வருடங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. மாறி மாறி கோர்ட்டுக்குத்தான் போய்கொண்டு இருக்கிறார்கள். ஊழலும், முறைகேடும் மலிந்து விட்டது. பதவிக்கு வருகிறவர்கள் அதை பயன்படுத்தி பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கத்தான் முயற்சிக்கிறார்களே தவிர சங்கத்துக்காக உழைக்க மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த தேர்தலில் என் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. அதற்கு புதியவர்கள் அணி என்ற பெயர் வைத்திருக்கிறேன். நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்ற பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் பற்றி பின்னர் அறிவிப்பேன். இதுவரை எந்த பதவியும் வகிக்காதவர்கள் போட்டியிடுவார்கள்.