பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் வெளியாகப்போகும் படம் மீகாமன். இதற்கு முன்பு அவர் சில ஆக்சன் கதைகளில் நடித்திருந்தபோதும் இந்த படம் அந்த படங்களையெல்லாம் விட அதிரடியான படமாம். 7 மெகா வில்லன்கள் உள்பட 13 வில்லன்களுடன் இந்த படத்துக்காக மோதியிருக்கிறார் ஆர்யா.
அந்த அளவுக்கு கடல் மார்க்கத்தில் நடக்கும் சில சம்பவங்களை உள்ளடக்கி அப்படம் உருவாகியிருக்கிறதாம். அதோடு, ஒவ்வொரு சண்டை காட்சிகளுக்காகவும் டூப் இல்லாமல் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம் ஆர்யா. இந்த தகவல் பரவியதை அடுத்து, ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு இணையாக கதைகளை ரெடி பண்ணிவிட்டு சில டைரக்டர்கள் ஆர்யாவை முற்றுகையிட்டுள்ளார்களாம்.
ஆனால் அப்படி வந்த டைரக்டர்களிடம், காது கொடுத்து அந்த கதைகளை கேட்கவில்லையாம் ஆர்யா. மாறாக, இதுவரை நான் நடித்ததில் மீகாமன் ஒரு அதிரடியான ஆக்சன் படம். இது ஒரு பெரிய பரிசோதனை முயற்சி என்றுகூட சொல்லலாம். அதனால் இந்த படததின் வெற்றிதான் நான் அடுத்தடுத்து ஆக்சன் கதைகளில் நடிப்பதை தீர்மானிக்கும் என்று சொன்னவர், மீகாமன் ரிலீசுக்குப்பிறகு முடிவு சொல்கிறேன் என்று அவர்களை அனுபபி விட்டாராம். அதனால் ஆர்யாவை விட அவருக்காக கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் டைரக்டர்கள் மீகாமன் மெகா ஹிட் படமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.